ஆப்நகரம்

ரொம்ப மோசமான கொரோனா.. உலகத்தையே அழிச்சிடுமாம்.. மக்களே உஷார்!

பிரிட்டனில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் உலகத்தையே அழித்துவிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Samayam Tamil 11 Feb 2021, 7:27 pm
உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களுக்கு பஞ்சமில்லாத காலம் உருவாகியிருக்கும் சூழலில், இன்னொரு உருமாறிய புதிய கொடிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலகத்தையே அழித்துவிடும் அளவுக்கு சக்திகொண்டது என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
Samayam Tamil top scientist warns uk kent coronavirus variant will likely sweep the world
ரொம்ப மோசமான கொரோனா.. உலகத்தையே அழிச்சிடுமாம்.. மக்களே உஷார்!


​புதிய கொரோனா

கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதனால் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.

​அடுத்தடுத்த வைரஸ்களின் அவதாரம்

பிரிட்டனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கியது. இதேபோல, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா என பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் புதுப்புது புதிய கொரோனா வைரஸ்கள் கிளம்பின.

​இது ரொம்ப டேஞ்சர்

இப்போது பிரிட்டனில் உள்ள கெண்ட் பகுதியில் வேறு ஒரு புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மிக மிக சக்திவாய்ந்தது என்று கூறப்படுகிறது. தடுப்பூசியால் இந்த கொரோனாவை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர் வல்லுநர்கள்.

​உலகத்தையே அழிக்குமா?

கெண்ட் பகுதியில் கிளம்பியுள்ள புதிய கொரோனா வைரஸ் உலகத்தையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும் என இங்கிலாந்தின் மூத்த மருத்துவ வல்லுநர் ஷரோன் பீகாக் எச்சரித்துள்ளார். மேலும், வைரஸ் அடுத்தடுத்து உருமாறும்போது தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி