முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் நிரந்தரமாக முடக்கியது. ஜனவரி 6ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இதேபோல மற்ற சமூக வலைதளங்களும் ட்ரம்பின் கணக்குகளை முடக்கின. இதன்பின்னர் கடந்த ஜூலை மாதம் ட்விட்டர், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கை மீட்டுத் தரும்படி ஃப்ளோரிடா நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும், முன்னெப்போதும் இல்லாத வகையிலும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் இருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், தாலிபான்கள் கூட சுதந்திரமாக ட்விட்டரில் பதிவிடுவதற்கு ட்விட்டர் நிர்வாகம் அனுமதிக்கிறது; ஆனால் தான் அதிபராக இருந்தபோது தனது ட்வீட்டுகள் போலித் தகவல்களை கொண்டவை என்று ட்விட்டர் தொடர்ந்து முத்திரை குத்தியதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கை மீட்டுத் தரும்படி ஃப்ளோரிடா நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும், முன்னெப்போதும் இல்லாத வகையிலும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் இருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், தாலிபான்கள் கூட சுதந்திரமாக ட்விட்டரில் பதிவிடுவதற்கு ட்விட்டர் நிர்வாகம் அனுமதிக்கிறது; ஆனால் தான் அதிபராக இருந்தபோது தனது ட்வீட்டுகள் போலித் தகவல்களை கொண்டவை என்று ட்விட்டர் தொடர்ந்து முத்திரை குத்தியதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.