ஆப்நகரம்

அமைதி மேம்பட ஆசைப்படும் மோடி, ட்ரம்ப்


TNN 15 Aug 2017, 9:18 pm
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி வளம் அதிகரிக்கச் செய்ய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil trump modi agree to enhance peace in indo pacific region
அமைதி மேம்பட ஆசைப்படும் மோடி, ட்ரம்ப்


கடந்த 2015-ம் ஆண்டு ‘இந்தியா - அமெரிக்கா இடையே ஆசிய - பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கான கூட்டு தொலை நோக்கு வியூகம்’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம், ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருந்தபோதிலும், தென்சீன கடல் பகுதி மீதான சீனாவின் ஆதிக்கம் தொடர்கதையாகி வந்தது. மேலும் இந்த ஆதிக்கத்திற்கு அமெரிக்கா சீனாவின் மீதான தனது கடுமையை தளர்த்தி கொண்டு போவதாகவும் கூறப்படுகிறது.





இந்நிலையில், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி வளம் அதிகரிக்கச் செய்ய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறிய போது, இந்த ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இம்மாத துவக்கத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏறக்குமதி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் திட்டம் தொடர்பாக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாகவும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் நடவடிக்கையை பார்க்க கிம் ஜாங் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

அடுத்த செய்தி