சவுதி அரேபிய பத்திரிகையாளரான ஜமால் கஷோகி, அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசர் சல்மானுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தனது முன்னாள் மனைவியை விவகாரத்து செய்தது தொடர்பாக, ஆவணம் ஒன்றைப் பெற துருக்கி சென்றார். இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குள் கடந்த 2ஆம் தேதி நுழைந்துள்ளார்.
அதன்பிறகு அவரைக் காணவில்லை. சவுதி அரேபியா அனுப்பிய ஆட்கள் தூதரகத்திற்குள் நுழைந்து கஷோகியை கொன்று, உடலைக் காரில் கொண்டு சென்றதாக துருக்கி கூறியது. ஆனால் இதை சவுதி அரேபியா மறுத்தது.
இதற்கிடையில் தூதரகத்தில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்டது, ஒரு திட்டமிட்ட நிகழ்வு. இது அக்டோபர் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது என்று துருக்கி அதிபர் எர்டோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதன்பிறகே கஷோகி மரணத்திற்கு வருந்துவதாக சவுதி வேதனை தெரிவித்தது. இதன்மூலம் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உறுதியானது. அவரது துண்டு, துண்டாக வெட்டப்பட்ட உடல் சவுதி துணைத் தூதர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதி அரேபியாவின் பதில் மிகவும் அதிருப்தி அளிக்கிறது. இந்த கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க இருக்கிறார்கள். இது வரலாற்றின் மிக மோசமான நிகழ்வு என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Trump says Khashoggi murder 'worst cover-up in history'.
இந்நிலையில் தனது முன்னாள் மனைவியை விவகாரத்து செய்தது தொடர்பாக, ஆவணம் ஒன்றைப் பெற துருக்கி சென்றார். இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குள் கடந்த 2ஆம் தேதி நுழைந்துள்ளார்.
அதன்பிறகு அவரைக் காணவில்லை. சவுதி அரேபியா அனுப்பிய ஆட்கள் தூதரகத்திற்குள் நுழைந்து கஷோகியை கொன்று, உடலைக் காரில் கொண்டு சென்றதாக துருக்கி கூறியது. ஆனால் இதை சவுதி அரேபியா மறுத்தது.
இதற்கிடையில் தூதரகத்தில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்டது, ஒரு திட்டமிட்ட நிகழ்வு. இது அக்டோபர் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது என்று துருக்கி அதிபர் எர்டோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதன்பிறகே கஷோகி மரணத்திற்கு வருந்துவதாக சவுதி வேதனை தெரிவித்தது. இதன்மூலம் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உறுதியானது. அவரது துண்டு, துண்டாக வெட்டப்பட்ட உடல் சவுதி துணைத் தூதர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதி அரேபியாவின் பதில் மிகவும் அதிருப்தி அளிக்கிறது. இந்த கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க இருக்கிறார்கள். இது வரலாற்றின் மிக மோசமான நிகழ்வு என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Trump says Khashoggi murder 'worst cover-up in history'.