ஆப்நகரம்

எங்க பதிலடி வெறித்தனமா இருக்கும்... ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பல மடங்கு அதிகமாக பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Samayam Tamil 15 Sep 2020, 10:46 pm
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அசாதாரண சூழல் நிலவி லருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார்.
Samayam Tamil donald trump


அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவால் உலகிற்கே பெரிய ஆபத்து: சீனா எச்சரிக்கை!

இந்நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அதில், "அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆயிரம் மடங்கு அதிகமாக பதிலடி தரப்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி