ஆப்நகரம்

Indonesia Tsunami: இந்தோனேசியாவைத் தாக்கியது பயங்கர சுனாமி!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், அங்கு பயங்கர சுனாமி தாக்கியுள்ளது.

Samayam Tamil 28 Sep 2018, 8:32 pm
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள பலு நகரத்தை பயங்கர சுனாமி தாக்கியுள்ளது.
Samayam Tamil இந்தோனேசியாவைத் தாக்கியது பயங்கர சுனாமி!!
இந்தோனேசியாவைத் தாக்கியது பயங்கர சுனாமி!!


இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மற்றும் மேற்கு சுலவேசி பகுதிகளில், இன்று மதியம் ரிக்டர் அளவில் 7.7 சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் சேதமடைந்தன. மேலும், இதில் ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடா்ந்து, இந்தோனேசியா புவியியல் ஆராய்ச்சி மையம், கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், இந்தோனேசியாவின் பலு நகரத்தை மிகவும் பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளில் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சுனாமியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி