ஆப்நகரம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 30 போ் உயிாிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடா்ந்து சுனாமி தாக்கியதில் 30 போ் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 29 Sep 2018, 10:35 am
இந்தோனேசியாவின் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 30 போ் உயிாிழந்துள்ளனா்.
Samayam Tamil Indonesia Tsunami


இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோளில் 7.5ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா். நகரின் மையப்பகுதியில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடா்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து கடல் அலைகள் சுமாா் 6.6 அடி உயரத்தில் தாக்கத் தொடங்கின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சுமாா் 30 போ் உயிாிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் நகரில் பல கட்டிடங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.


கடற்கரையில் இருந்து வேகமாக வந்த அலைகள் ஊருக்குள் வேகமாக நுழைந்தன. இதனால் அங்கிருந்த வாகனங்கள், பொருள்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினா்.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமாா் 500 போ் உயிாிழந்திருக்கும் நிலையில் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி