ஆப்நகரம்

மாயமான சவுதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகி; கொலைக்கான ஆதாரம் காட்டும் துருக்கி!

இஸ்தான்புல்: காணாமல் போன சவுதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Oct 2018, 12:16 am
சவுதி அரேபிய செய்தியாளரான ஜமால் கஷோகி, அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசர் சல்மானுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார்.
Samayam Tamil Jamal


இந்நிலையில் துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். எனவே அந்நாட்டு சட்டப்படி சில ஆவணங்கள் பெற, இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு கடந்த 2ஆம் தேதி சென்றார்.

அதன்பிறகு அவரைக் காணவில்லை. சவுதி அரேபியா அனுப்பிய ஆட்கள் தூதரகத்திற்குள் நுழைந்து கஷோகியை கொன்று, உடலைக் காரில் கொண்டு சென்றதாக துருக்கி கூறுகிறது. ஆனால் இதை சவுதி அரேபியா மறுத்துள்ளது.

இந்நிலையில் தூதரகத்தில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆதாரங்களை வெளியிட்டால் இருநாட்டு நல்லுறவு பாதிக்கும் என்று அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சவுதி அரேபியக் குழு துருக்கி சென்றுள்ளது. செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உண்மை எனவும், அதற்கு சவுதி தான் காரணம் எனவும் நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டிற்கு மிகப்பெரிய அவப்பெயர் உண்டாகும். அந்நாட்டுடன் கொண்ட தொடர்பில் இருந்து பிற நாடுகள் விலகும் என்று கூறப்படுகிறது.

Turkey 'has recording proving Saudi murder'.

அடுத்த செய்தி