துருக்கியில் போலீசாரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில், 11 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
அண்டை நாடான சிரியாவில் உள்ள குர்து விடுதலைப் போராளிகள் மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் மீது, துருக்கி அரசு தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், சிரியாவின் எல்லையை ஒட்டி, துருக்கியின் தென்கிழக்கே உள்ள சைஸர் என்ற நகரத்தில் இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அங்குள்ள போலீஸ் சோதனைச் சாவடியின் தலைமையகத்தில் நடந்த இந்த தற்கொலை தாக்குதலில், 11 போலீசார் உடல்சிதறி உயிரிழந்தனர். 80க்கும் அதிகமான பொதுக்கள், போலீசார் உள்ளிட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, குர்திஸ்தான் விடுதலைக்காகப் போராடிவரும் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
அண்டை நாடான சிரியாவில் உள்ள குர்து விடுதலைப் போராளிகள் மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் மீது, துருக்கி அரசு தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், சிரியாவின் எல்லையை ஒட்டி, துருக்கியின் தென்கிழக்கே உள்ள சைஸர் என்ற நகரத்தில் இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அங்குள்ள போலீஸ் சோதனைச் சாவடியின் தலைமையகத்தில் நடந்த இந்த தற்கொலை தாக்குதலில், 11 போலீசார் உடல்சிதறி உயிரிழந்தனர். 80க்கும் அதிகமான பொதுக்கள், போலீசார் உள்ளிட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, குர்திஸ்தான் விடுதலைக்காகப் போராடிவரும் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.