ஆப்நகரம்

துருக்கியில் குண்டுவெடிப்பு; 10 பேர் படுகாயம்

துருக்கி நாட்டில், போலீஸ் நிலையத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

TNN 6 Oct 2016, 9:33 pm
துருக்கி நாட்டில், போலீஸ் நிலையத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil turkey10 injured in bomb blast near istanbul police station
துருக்கியில் குண்டுவெடிப்பு; 10 பேர் படுகாயம்


அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லின் யெனிபோஸ்னா பகுதியில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு, திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அங்கிருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள் அருகே யாரும் செல்லாத நிலையில், சற்று தொலைவில் நின்றவர்களே காயம் அடைந்ததாகவும், அருகே சென்றிருந்தால், இன்னும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு, எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, துருக்கி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அந்நாட்டில் அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாகக்கூறி, அரசு அதிகாரிகள், போலீசார் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Turkey: 10 injured in bomb blast near Istanbul police station:
A bomb placed on a motorcycle exploded Thursday near a police station in Istanbul, wounding at least 10 people, a senior official said.

அடுத்த செய்தி