ஆப்நகரம்

துருக்கியில் அவசரநிலை பிறப்பித்து அதிபர் உத்தரவு

துருக்கியில் ஏற்பட்ட ராணுவக் கிளர்ச்சியை அந்த நாட்டு அரசு முறியடித்ததைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அவசரநிலை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jul 2016, 6:50 am
அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட ராணுவக் கிளர்ச்சியை அந்த நாட்டு அரசு முறியடித்ததைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அதிபர் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil turkeys erdogan declares state of emergency after coup attempt
துருக்கியில் அவசரநிலை பிறப்பித்து அதிபர் உத்தரவு


Turkish president declares 3-month state of emergency after failed coup: AFP — ANI (@ANI_news) July 20, 2016
துருக்கியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ராணுவக் கிளர்ச்சி சில மணிநேரங்களிலேயே முறியடிக்கப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மக்களும் திரளாக சாலைகளில் கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ ஆட்சி உடனடியாக முடிவுக்கு வந்தது. அந்த ராணுவக்கிளர்ச்சியின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இதனையடுத்து, மீண்டும் துருக்கியில் மக்களாட்சி மலர்ந்துள்ளபோதும் இயல்புநிலை திரும்புவதற்காக 3 மாதங்களுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் தயீப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி