ஆப்நகரம்

சோமாலியா இரட்டை கார் குண்டு தாக்குதலில் 27 பேர் பலி!

சோமாலியாவில் அல் ஷாபாப் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2018, 4:04 pm
சோமாலியாவில் அல் ஷாபாப் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil twin car bombings kill nearly 30 in somalias mogadishu
சோமாலியா இரட்டை கார் குண்டு தாக்குதலில் 27 பேர் பலி!


சோமாலியாவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்த சோதனை சாவடி மீது அல் ஷாபாப் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர்.



பின்னர் இரண்டாவது முறையாக உள்ளூர் அரசு தலைமை அலுவலகத்தை குறி வைத்து கார் குண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இந்த இரட்டை கார் குண்டு தாக்குதலில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் மோகாதிஷு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி