ஆப்நகரம்

ஈரான் நாடாளுமன்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!!

ஈரானில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TOI Contributor 7 Jun 2017, 1:33 pm
டெல்லி: ஈரானில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil twin terror attacks hit in iran
ஈரான் நாடாளுமன்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!!


ஈரான் நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக துப்பாக்கியுடன் நுழைந்த சிலர் அங்கு இருந்தவர்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ''நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நாடாளுமன்றத்துக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இருவர் பலியாயினர். 8 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெஹ்ரான் நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒருவர் மட்டும் துப்பாக்கியுடன் இருக்கிறார் என்றும், இல்லை மூவர் துப்பாக்கியுடன் உள்ளனர் என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தெற்கு டெஹ்ரானில் உள்ள அயதுல்லா கோமேனியின் சமாதி மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த மர்ம நபர் பெண் என்பதும், பின்னர் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 1979ல், ஈரானில் முஸ்லிம் புரட்சியை ஏற்படுத்தியவர் கோமேனி என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த சம்பவத்தில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஈரானில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து சன்னி ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வெளிப்பாடாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

Two killed in attacks on Iran parliament, shrine: Reports

அடுத்த செய்தி