ஆப்நகரம்

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

ஐஎஸ் அமைப்பினரால் சிரியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 170 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

TOI Contributor 27 Jul 2016, 3:39 pm
ஐஎஸ் அமைப்பினரால் சிரியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 170 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
Samayam Tamil two bomb blast in syria
சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு


குர்திஷ் நிர்வாக தலைமை கட்டிடத்தின் அருகில் ஒரு குண்டு வெடித்துள்ளது. இரண்டு குண்டுகளில் ஒன்றை காரிலும், மற்றொன்றை இரு சக்கர வாகனத்தில் வைத்து வெடிக்க செய்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, குர்திஷ் பாதுகாப்பு படையை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். ஐஎஸ் அமைப்பினருக்கும் குர்து படையினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ஐஎஸ் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் குர்து படையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஜூலையில் நடைபெற்ற அதே போன்ற தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி