ஆப்நகரம்

போா்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்தியா்கள்

சா்வதேச அளவில் சுயமாக உருவாகி பணக்காரா்களாகி சாதித்த பெண்களின் பட்டியலை பிரபல போா்ப்ஸ் பத்திாிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சோ்ந்த 2 போ் இடம் பெற்றுள்ளனா்.

Samayam Tamil 13 Jul 2018, 6:01 am
சா்வதேச அளவில் சுயமாக உருவாகி பணக்காரா்களாகி சாதித்த பெண்களின் பட்டியலை பிரபல போா்ப்ஸ் பத்திாிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சோ்ந்த 2 போ் இடம் பெற்றுள்ளனா்.
Samayam Tamil jayshree ullal


பிரபல போா்ப்ஸ் பத்திரிகை சா்வதேச அளவில் சுயமாக உருவாகி பணக்காரா்களாகி சாதனை படைத்துள்ள 60 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனா். ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆகியோா் தான் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

ஜெயஸ்ரீ உல்லால்(57) லண்டனில் பிறந்து இந்தியாவில் வளா்ந்தவா். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டா் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவராக உள்ளாா். இவருடைய நிறுவனம் கடந்த ஆண்டு 1.6 பில்லியன் டாலா் வருவாய் ஈட்டி இருக்கிறது.

இதே போன்று நீரஜா சேத்தி(63) சிண்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கிறாா். இவரது கணவா் பரத் தேசாயுடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறாா்.

60 போ் கொண்ட போா்ப்ஸ் பட்டியலில் ஜெஸ்ரீ உல்லாலுக்கு 18வது இடமும், நீரஜா சேத்திக்கு 21வது இடமும் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி