ஆப்நகரம்

நெருப்பு வளையத்தில் சிக்கி தவிக்கும் நியூசிலாந்து மக்கள்!

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TOI Contributor 14 Nov 2016, 12:54 pm
நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil two killed as powerful earthquake hits new zealand
நெருப்பு வளையத்தில் சிக்கி தவிக்கும் நியூசிலாந்து மக்கள்!


நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சின் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ., தூரத்தில், நேற்று திடீரென இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 7.4 மற்றும் 7.8 ஆக பதிவானது. இது பாதிப்புகள் அடங்குவதற்குள் சுனாமி தாக்கியது.

இதில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகமல் இருந்தது. தற்போது இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,’ நியூசிலாந்தையே இந்த நிலநடுக்கம் கதிகலங்க வைத்துவிட்டது. இதை தேசிய அவசர நிலை என்று சொல்வதை
தவிர வார்த்தைகள் இல்லை. இதில் தற்போதைய நிலவரப்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மக்கள் மேடான இடங்களை நோக்கி செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

இந்த நிலநடுக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, பசுபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 40,000 கி.மீ., பரப்பளவில் எரிமலைகளும் மற்றும் கடற்குழிகளும் பரவியிருக்கும் ‘ரிங் ஆப் பயர்’ (நெருப்பு வளையம்) என்ற பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதே காரணமாக கருதப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இப்பகுதியில் ஏற்படும் 90 சதவீத நிலநடுக்கத்துக்கு இந்த நெருப்பு வளையம் தான் முக்கிய காரணம் என் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி