ஆப்நகரம்

விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்: கடலில் குதித்து கரை சேர்ந்தனர்!

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

Samayam Tamil 3 Aug 2020, 11:04 am
கொரோனா பொது முடக்கத்தால் பக்கத்து மாவட்டத்துக்குகூட போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு மாதங்களை விண்வெளியில் கழித்துவிட்டு திரும்பியுள்ளனர் இரு வீரர்கள்.
Samayam Tamil two nasa astronauts returned to earth after 64 days


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசா அனுப்பிய விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்.

மே 31ஆம் தேதி ப்ளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் ஏவுகளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ட்ரம்ப் என்ன செய்வாரோ... பயத்தில் டிக்டாக் செயலி வாங்கும் முடிவை கிடப்பில் போடும் மைக்ரோசாஃப்ட்!!

ராபர்ட் எல்.பென்கென், டக்ளஸ் ஜி ஹர்லி ஆகிய இரு வீரர்களும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரு மாதங்களாக ஆராய்ச்சி செய்தனர். கார்ப்பரேட் ஆய்வு, பார்வையிடல், செயற்கைகோள் பழுதுபார்ப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டதுடன் வருங்காலத்தில் பலர் விண்வெளிக்கு செல்வதற்கான முதல் படியாகவும் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு அவர்கள் கடந்த 1ஆம் தேதி பூமியை நோக்கி புறப்பட்டனர்.

சோதனைகள் நிறைவு; கொரோனா தடுப்பு மருந்து ரெடி - இன்னும் ரெண்டே மாசம் தான்!

இந்த நிலையில் புளோரிடா வளைகுடாவுக்கு தெற்கே பென்சாக்கோலாவுக்கு அருகே விண்கலமானது கடலில் தரையிறங்கியது. அங்கிருந்து விண்வெளி வீரர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

அடுத்த செய்தி