ஆப்நகரம்

மனித உரிமை ஆணையத்திலிருந்து விலகியது அமெரிக்கா

மனித உரிமை ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஐ.நா. சபைக்கான அந்நாட்டின் பிரதிநிதி நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 4:17 am
மனித உரிமை ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஐ.நா. சபைக்கான அந்நாட்டின் பிரதிநிதி நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.
Samayam Tamil DgFWr-SWkAEj2zn


இது தொடர்பாக நிக்கி ஹாலே வெளியிட்ட அறிவிப்பில், மனித உரிமைகள் ஆணையம் தனது பெயருக்கு உரிய விதத்தில் செயல்படவில்லை என்பதால் விலக முடிவுசெய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா நம்பிக்கை வைக்கும் அமைப்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் இருக்க வேண்டும் என்றால் அது மாற்றத்தைச் சந்திக்க வேண்டும் என்றும் ஹாலே தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான இந்த அமைப்பில் அமெரிக்கா விலகலைத் தொடர்ந்து 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்