ஆப்நகரம்

வாட்ஸ் ஆப், முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு புதிய வரி அமல்

வதந்திகள் காட்டுத் தீயாக பரவுவதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப், முகநூல், டுவிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வரியை விதிப்பதாக உகாண்டா அதிபர் யொவேரி முசுவெனி அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 10:54 pm
வதந்திகள் காட்டுத் தீயாக பரவுவதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப், முகநூல், டுவிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வரியை விதிப்பதாக உகாண்டா அதிபர் யொவேரி முசுவெனி அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil WhatsApp


சர்வதேச அளவில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களாக வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர், வைபர் உள்ளிட்டவை உள்ளன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் பரப்பப் பட்டாலும், சில வதந்திகள், பொய்யான செய்திகள் பரவுகின்றன. அதுவும் காட்டுத் தீ போல் கொளுந்துவிட்டு எரிந்து பரவுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புதிய வரி :
சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான தகவல், வதந்திகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில் உகாண்டா நாட்டில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் அந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தவும் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி இந்த ஆப்களைப் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றிற்கு 200 சில்லிங் (ரூ. 3.54) வரிகட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றைய பண மதிப்பின்படி இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு, உகாண்டாவில் 56 சில்லிங்காக உள்ளது

அந்த நாட்டில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் தொலைப்பேசியைப் பயன்படுத்துகின்றனர். அதில் 1 கோடியே 70 லட்சம் பேர் இண்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த புதிய வரி மூலம் வதந்திகள் பரவுவதை தடுப்பதோடு, அரசுக்கு வருமானமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்விக்காக இணையதளத்தைப் பயன்படுத்தினால் வரிவிதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி