ஆப்நகரம்

மோசமடைந்த புதிய கொரோனா.. இனி தடுப்பூசியாலும் காப்பாத்த முடியாதாம்!

புதிய கொரோனா வைரஸ் மேலும் உருமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2021, 7:57 pm
கொரோனா வைரஸுடன் ஒரு ஆண்டுகாலமாக போராடி வந்த நிலையில், புதிய கொரோனா ஒன்று முளைத்தது. இப்போது, புதிய கொரோனாவே மிக மோசமடைந்து இன்னொரு புதிய கொரோனா உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil uk coronavirus reportedly mutated again could make vaccines less effective
மோசமடைந்த புதிய கொரோனா.. இனி தடுப்பூசியாலும் காப்பாத்த முடியாதாம்!


புதிய கொரோனா

ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகளவில் கோடிக்கணக்கான மக்களை வேதனைக்குள்ளாகியது கொரோனா வைரஸ். இது போதாதென்று கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதிய கொரோனாவாக வெடித்து.

​அசுர வேகத்தில் புதிய கொரோனா

புதிய கொரோனா வைரஸ் முன்பை காட்டிலும் 70% அதிக வேகத்தில் பரவுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதனால், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இந்த புதிய கொரோனாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் நாடு திணறி வருகிறது.

​இன்னொரு புதிய கொரோனா

பிரிட்டனில் ஏற்கெனவே பரவும் புதிய கொரோனா மேலும் வலுவடைந்து இன்னொரு கொரோனாவால உருவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் குறைவானவர்களுக்கு மட்டுமே பரவியுள்ளது. எனினும், இனிவரும் நாட்களில் என்ன விதமான பாதிப்பு ஏற்படும் என்பது சந்தேகமே.

​தடுப்பூசி வேலைக்கு ஆகாது

இந்த உருமாறிய புதிய கொரோனாவை தடுப்பூசிகளால் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர் ஆய்வாளர்கள். ஏற்கெனவே கொரோனாவுக்கு உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் உலகம் முழுக்க பல நாடுகளில் போடப்பட்டு வரும் நிலையில், இப்புதிய கொரோனாவை தடுக்க இன்னொரு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி