ஆப்நகரம்

பென்ஷன் பணத்திற்காக இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபீரிஸரில் மறைத்த கொடூரம்!

பென்ஷன் பணத்திற்காக இறந்தவர் உடலை இரண்டு ஆண்டுகள் ஃபிரீஸரில் மறைத்து வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 4 May 2023, 12:32 pm
பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் கூட பழகியவர்களே நம்பியவர்களை கொலை செய்வதும், ஏமாற்றுவதும் , நம்பிக்கை துரோகம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நம்ம ஊர் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் பென்ஷன் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த நபர், இறந்தவரின் உடலை 2 ஆண்டுகள் ஃபிரீஸரில் பதுக்கி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil பென்ஷன் பணத்திற்காக உடல் மறைப்பு

Cyclone: புயலால் தமிழகத்தில் மழை குறையும்... வெயில் அதிகரிக்கும்... வானிலை மையம் ஷாக் தகவல்!
இந்த சம்பவம் லண்டனில் பர்மிங்காமின் டவுன்டவுன் பகுதியில் அரங்கேறியுள்ளது. ஜான் வைன்ரைட் என்ற 71 வயதான நபர் பர்மிங்காமின் டவுன்டவுன் கிளீவ்லேண்ட் டவரில், ஹோலிவெல் ஹெட் என்ற இடத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அவருடன் 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவரும் இருந்துள்ளார்.

ஓய்வூதியதாரரான ஜான் வைரன்ட், கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனால் அவரது உடல் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஃபிரீஸரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் தடுத்ததாகவும், இறந்தவரின் பணத்தை மோசடி செய்து பயன்படுத்தியதாகவும் டேமியன் ஜான்சன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
11 dead: கோர விபத்து... குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி.. திருமணத்திற்கு சென்றபோது சோகம்!

ஆனால் வைன்ரைட்டின் கணக்கில் இருந்து தான் பயன்படுத்திய பணம் தொழில்நுட்ப ரீதியாக தன்னுடையது என்று வாதிட்டு மூன்று மோசடி குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் டேமியன் ஜான்சன். திரு வைன்ரைட்டின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்தல், பணத்தை எடுத்தல் மற்றும் தனது சொந்தக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் போன்ற மோசடி குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Vijayabaskar: தொடரும் சோகம்... மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை திடீர் மரணம்!
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு வைன்ரைட் எப்படி மரணமடைந்தார்? அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டேமியன் ஜான்சனுக்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இறந்தவரின் உடலை இரண்டு ஆண்டுகளாக ஃபிரீஸரில் மறைத்து வைத்து அவரது பென்ஷன் பணத்தை ஒன்றாக வசித்தவர் மோசடி செய்து பயன்படுத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி