ஆப்நகரம்

ஒருகிளாஸ் தண்ணி தராத காதலியை 100 முறை குத்திய காதலன்!

ஒரு கிளாஸ் தண்ணி கேட்டு தராத காதலியை 100 முறை கத்தியால் குத்திய காதலனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

TOI Contributor 19 Sep 2016, 2:14 pm
பிரிங்டான்: ஒரு கிளாஸ் தண்ணி கேட்டு தராத காதலியை 100 முறை கத்தியால் குத்திய காதலனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil uk teen stabbed 100 times by boyfriend survives attack by playing dead
ஒருகிளாஸ் தண்ணி தராத காதலியை 100 முறை குத்திய காதலன்!


இங்கிலாந்தின் பிரிங்டான் பகுதியில் காதலன், காதலி தங்களது 2 வயது மகனுடன் வாழ்ந்துவந்தனர். காதலன் வேலைக்கு எதுவும் போகவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் மத்தியில் அடிக்கடி வாக்குவாதம் வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒருநாள் காதலியிடம் ஒரு கிளாஸ் தண்ணி கேட்டுள்ளார் காதலன். ஆனால் காதலி தர மறுக்க,ம் வெறியாம காதலம் அருகில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக 100 இடங்களில் குத்தியுள்ளார்.

ஆனால் காதலி சாகவில்லை. இருப்பினும் செத்துவிட்டது போல நடித்துள்ளார். இதையடுத்து காதலன் தப்பி ஓடிவிட்டான். இதன் பின் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலி உயிரை கையில் பிடித்துக்கொண்டு, அருகில் உள்ள பஸ்ஸடாப்பிற்கு சென்று பஸ்சில் ஏறி மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்களது 2 வயது மகனை அருகில் இருந்த வீட்டார் காப்பாற்றியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியது:
அந்த பெண்ணை தாறுமாராக குத்தியுள்ளான. அவரின் கழுத்து பகுதியில் கத்தியின் சிறு நுணிப்பகுதி உடைந்து ஒட்டியுள்ளது. தவிர, அவரது இரண்டு நுரையீரலையும் பஞ்சராக்கிவிட்டான். எப்படியும் அந்த பெண்ணுக்கு சுமார் 500 தையல் போட வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தப்பிஓடிய காதலனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இவருக்கு சுமார் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி