ஆப்நகரம்

ஊரடங்கு தளர்வு.. இந்த தேதி முதல்.. எதற்கெல்லாம் அனுமதி?

அடுத்த வாரம் முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 May 2021, 4:57 pm
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil lockdown


இதன்படி, மே 17ஆம் தேதி முதல் ஊரடங்கில் மேற்கொள்ளப்படும் தளர்வுகளுக்கு பின் உணவகங்கள், பப், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை சென்று சந்திக்கவும் அனுமதிக்கப்படவுள்ளது. எனினும், கடைகள், உணவகங்கள், பப், அலுவலகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

6 அடி வரை பாயும் கொரோனா வைரஸ்; வந்தது அடுத்த ஆபத்து!
ஊரடங்கை தளர்த்துவதற்கு செயல்திட்டத்தை உருவாக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மிகவும் குறைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி