ஆப்நகரம்

கடும் உணவு பஞ்சம் - 1 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு?

1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 3:43 pm

ஹைலைட்ஸ்:

  • 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்
  • ஐ.நா., தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Deadly Hunger
எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். டைக்ரேவில் சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிக்கன் வேணாம்.. பீப் சாப்பிடுங்க..!" - பா.ஜ.க., அமைச்சர் பரிந்துரை!
தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது. சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்னைகளை பிரதமர் அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி