ஆப்நகரம்

போர் வந்திருச்சு மக்களே; உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தல்!

உள்நாட்டு போர் காரணமாக, இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2019, 9:24 pm
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக லிபியா விளங்குகிறது. இங்கு 34 ஆண்டுகளாக அதிபர் கடாபி சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வந்தார். இதையடுத்து 2011ஆம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது.
Samayam Tamil Sushma Swaraj


அப்போது ஏற்பட்ட புரட்சியில் கடாபி ஆட்சி அகற்றப்பட்டு, போர் முடிவுக்கு வந்தது. பின்னர் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2015ல் இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது.

அதற்கு ஐ.நா ஆதரவு அளித்தது. இருப்பினும் அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வந்தது. இதன் காரணமாக லிபியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது. மறுபுறம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் காலூன்ற தொடங்கியது.

இந்த சூழலில் லிபியா நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, அந்நாட்டின் கிழக்கே போட்டி அரசு ஒன்று இயங்கி வருகிறது. அதன் லிபியா தேசிய ராணுவ தளபதி கலிபா ஹாஃப்டர், தலைநகர் திரிபோலியை கைப்பற்ற தாக்குதல் நடத்தி வருகிறது.

லிபியா அரசுப்படை மற்றும் கலிபா ஹாஃப்டர் படைக்கும் இடையே நடந்த சண்டையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு நிலைமை மோசமாகி வருவதால், இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லிபியாவில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு, பலர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் 500க்கும் மேற்பட்டோர் இன்னும் அங்கேயே உள்ளனர்.

அடுத்த செய்தி