ஆப்நகரம்

ஏமன் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் எதிர்கால தலைமுறைக்கே ஆபத்து: ஐ. நா. அறிக்கை

ஏமனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவந்த போர் காரணமாக லட்சக் கணக்கான குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 14 Feb 2019, 5:58 pm
ஏமனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவந்த போர் காரணமாக லட்சக் கணக்கான குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.
Samayam Tamil Yemen-slide-WTTL-articleLarge


ஏமன் நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாகநீடித்து வரும் போர் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இ‌ல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.நா.வின் முயற்சியை தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டை தற்போது ஓய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய துறைமுகமான ஹொதைதாவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

எனினும் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக லட்சக்கணக்கானக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு தலைமுறையே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏமனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவந்த போர் காரணமாக லட்சக் கணக்கான குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏமன் நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாகநீடித்து வரும் போர் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இ‌ல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.நா.வின் முயற்சியை தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டை தற்போது ஓய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய துறைமுகமான ஹொதைதாவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

எனினும் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக லட்சக்கணக்கானக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு தலைமுறையே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி