ஆப்நகரம்

இனி வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்யலாம்: ஹேப்பி நியூஸ் மக்களே!

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்வதற்கான கிட்டுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 7:38 pm
கடந்த ஒரு ஆண்டுகாலமாக கொரோனாவுடன் உலக மக்கள் போராடி வருகின்றனர். கொரோனா தொற்று இருப்பதை வெறும் 30 நிமிடங்களில் கண்டறிவதற்கான கருவிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil us approves first covid 19 home testing kit results within 30 minutes
இனி வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்யலாம்: ஹேப்பி நியூஸ் மக்களே!


​சோதனையே பெரும் சோதனை

தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை கண்டறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், சம்பந்தப்பட்ட நபர்களின் சளி மாதிரியை எடுத்து சோதனை செய்வர். பிசிஆர் சோதனை மிகவும் துல்லியமானதாக இருந்தாலும், சோதனை முடிவுகள் வெளியாவதற்கு சில தினங்கள் ஆகும்.

பெரும் பிரச்சினை

பிசிஆர் டெஸ்டில் சோதனை முடிவுகள் வெளியாவதற்கு சில தினங்கள் காலம் எடுப்பதால், இடைப்பட்ட காலத்தில் நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வேகமாக பரவிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இப்படியே ஒருவரிடமிருந்து மற்றவர் என கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் பரவியது.

வந்துவிட்டது 30 நிமிட டெஸ்ட்

வெறும் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியக்கூடிய டெஸ்ட் கிட்டை கலிபோர்னியாவை சேர்ந்த லூசிரா ஹெல்த் என்ற நிறுவனம் உருவாக்கியிருந்தது. இந்த டெஸ்ட்டிங் கிட்டை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

வீட்டிலேயே டெஸ்ட் செய்யலாம்

சளி மாதிரியை எடுத்து டெஸ்டிங் யூனிட்டில் வைத்தால் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் சோதனை முடிவுகள் வந்துவிடும். இதை வீட்டிலேயே பயன்படுத்தி சோதனை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் டெஸ்ட் செய்யலாம்?

14 வயதுக்கும் மேற்பட்டோருக்கு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இந்த அரை மணி நேர டெஸ்டிங் கிட்டை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி