ஆப்நகரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக்கான் கைது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அமெரிக்கா சென்றிருந்த போது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 12 Aug 2016, 1:31 pm
லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அமெரிக்கா சென்றிருந்த போது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் எதும் தெரியாமல், அவருடைய டுவிட்டர் பக்கத்தில், உலகத்தில் பாதுகாப்பு முக்கியம் தான், ஆனால், அதை தவறாக எண்ண வைத்து விட்டனர் இந்த அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் என்று நான் முழுமையாக புரிந்து கொண்டேன், என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil us assistant secretary of state apologises to srk for airport detention
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக்கான் கைது


மற்றொரு டுவிட்டரில், என்னை கைது செய்த அதே வேளையில், சில போக்கிமான்களை பிடிக்க முடிந்தது என்று தெரிவித்திருந்தார். ஷாருக்கானை கைது செய்த இந்த செயலுக்கு இதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் துணை செயலாளர் நிஷா பிஸ்வால் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், ஷாருக்கான் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2012ம் ஆண்டு யாலே பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸ் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடம் வரை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதே போல், கடந்த 2009ம் ஆண்டும், நெவார்க் விமான நிலையத்தில் 2 மணி நேரம் வரை கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பிறகு இந்திய தூதரகம் தலையிட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி