ஆப்நகரம்

விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தமிழக ஐடி ஊழியருக்கு 9 ஆண்டு சிறை!

புதுடெல்லி: விமானத்தில் சக பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தமிழகத்தின் ஐடி ஊழியருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 5:20 pm

ஹைலைட்ஸ்:

  • விமான ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி சரியாக உடை அணியாமல் இருந்தாகவும், அந்த பெண் சீட்டில் இருந்ததையும் உறுதி செய்தனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 1
தமிழகத்தை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35 வயது) அமெரிக்காவின் டெட்ரியாட் நகரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். எச்-1பி விசா மூலம் கடந்த 2015ல் அமெரிக்காவில் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ரியாட்டுக்கு விமானத்தில் சென்றுள்ளார். இரவு பயணத்தின் போது பயணிகள் தூங்கியுள்ளனர். பிரபு ராமமூர்த்தி சீட்டுக்கு அடுத்த சீட்டில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

இதையடுத்து பிரபு ராமமூர்த்தி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. தூக்கத்தில் இருந்த அந்த பெண் பதறி எழுந்துள்ளார். விமான ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி சரியாக உடை அணியாமல் இருந்தாகவும், அந்த பெண் சீட்டில் இருந்ததையும் உறுதி செய்தனர்.
இதையடுத்து விமானம் தரையிறங்கியவுடன் பிரபு ராமமூர்த்தி மீது அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கில் தீ்ர்பளித்த நீதிபதி பிரபு ராமமூர்த்தி தவறான முறையில் நடந்ததற்கு ஆதாரம் இருப்பதை உறுதி செய்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

அடுத்த செய்தி