ஆப்நகரம்

தென் கொரிய தலைநகரில் 70 ஆண்டுகால ராணுவ முகாமிற்கு மூடுவிழா: அமெரிக்கா அதிரடி!

அமெரிக்க ராணுவத்தினரின் முகாமை மூடி, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Samayam Tamil 29 Jun 2018, 4:03 pm
சியோல்: அமெரிக்க ராணுவத்தினரின் முகாமை மூடி, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Samayam Tamil US Military
புதிய ராணுவ முகாமில் அமெரிக்க ராணுவனத்தினரின் சல்யூட்


கடந்த 1945ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவம் முதல் முறையாக தென்கொரியா சென்றது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை எதிர்கொள்ள அங்கு முகாம் ஒன்றை உருவாக்கியது. இதில் வெற்றி கொண்ட பின், அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டது. பின்னர் அமெரிக்க - தென் கொரிய நட்புறவால் ராணுவ முகாம் தொடர்ந்து நீடித்தது.

இதற்கிடையில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தடையை மீறி, அணு ஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை என பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது.

இதையடுத்து ஐ.நா சபை, அமெரிக்க உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியது. எனவே தென் கொரியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்தினர் செயல்பட்டனர்.

இருநாடுகளும் இணைந்து, பல்வேறு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பால், இருநாடுகளுக்கு இடையேயான விரோதம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில், அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் தென் கொரிய தலைநகரில் இருந்த ராணுவ முகாமை காலி செய்துள்ளது. இதன்மூலம் தென்கொரிய மண்ணில் 70 ஆண்டுகால, அமெரிக்க ராணுவத்தினரின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

US ends 70 years of military presence in South Korean capital.

அடுத்த செய்தி