ஆப்நகரம்

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா: உள்ள வர தடை போட்ட டிரம்ப்!

அமெரிக்காவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை நீட்டி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

TNN 25 Sep 2017, 8:30 am
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை நீட்டி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil us expands travel ban to include n korea
வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா: உள்ள வர தடை போட்ட டிரம்ப்!


பல்வேறு நாடுகளின் ஆலோசனைகளின் படி, அமெரிக்க வெள்ளை மாளிகை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதனை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று வெளியிட்டார்.

அதில், அமெரிக்காவை பாதுகாப்பானதாக மாற்றுவதே முதல் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நபர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Making America Safe is my number one priority. We will not admit those into our country we cannot safely vet.https://t.co/KJ886okyfC — Donald J. Trump (@realDonaldTrump) September 24, 2017 அதன்படி, வடகொரியா, வெனிசுலா, சாட் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நாடுகளின் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தாருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூடான் மீதான தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் முஸ்லீம் நாடுகளின் மீது மட்டும் டிரம்ப் விதித்த தடை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத ரீதியாக மக்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில் டிரம்பின் உத்தரவுகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையும், முஸ்லீம்கள் மீதான அத்துமீறல் என்று அமெரிக்க சிவில் யூனியன் உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு, ராஜாங்க ரீதியில் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

US expands travel ban to include N Korea.

அடுத்த செய்தி