ஆப்நகரம்

இன்னொரு புதிய கொரோனா கெளம்பிருச்சு... இனி தாங்க முடியாது குருநாதா!

அமெரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Jan 2021, 9:50 pm
2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் 70% அதிக வேகத்தில் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், பிரிட்டனில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
Samayam Tamil Representational image


இந்நிலையில், அமெரிக்காவிலும் வேறு ஒரு புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே உலகளவில் அமெரிக்கா மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஓஹியோவில் இரண்டு உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு கொரோனாவுக்கு கொலம்பஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓஹியோ ஸ்டேட் பல்கலைகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா போகணுமா? இனி இது கட்டாயம் வேணும்!
கொலம்பஸ் நகரத்தில் இப்புதிய வைரஸ் செப்டம்பர் மாதம் முதல் பரவி வருவதாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனாவுக்கும், தென்னாப்பிரிக்காவில் பரவும் கொரோனாவுக்கும், ஓஹியோவில் பரவும் கொரோனாவுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா வருவோர் கட்டாயமாக கோவிட் நெகடிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சான்றிதழ் இல்லாதவர்களை விமானத்துக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி