ஆப்நகரம்

கத்தாரில் தாலிபன்களுடன் அமெரிக்கத் தூதர் பேச்சுவார்த்தை

காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதால், அமெரிக்கா தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையை கைவிட்டது.

Samayam Tamil 5 Dec 2019, 4:02 pm
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா கத்தாரில் தாலிபன் பயங்கரவாத அமைப்பினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
Samayam Tamil us negotiator zalmay khalilzad to resume taliban talks in qatar
கத்தாரில் தாலிபன்களுடன் அமெரிக்கத் தூதர் பேச்சுவார்த்தை


தாலிபன்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்றுவந்தது. பல கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் தடைபட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிதியாக ஆப்கனுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் கத்தார் சென்று தாலிபன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்போகிறார் என அமெரிக்க அரசிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் 8 குழந்தைகளைக் கொன்ற பயங்கரவாதிகள்

வன்முறையைக் குறைத்து போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

கடந்த செப்டம்பரில் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்கப் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்திய தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திக்கொண்டார்.

இதற்குப் பின் நவம்பர் 28 ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட டொனால்ட் டர்ம்ப் ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானியுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெர்மன் அருங்காட்சியகத்தில் இளம் வயது திருவள்ளுவர்

அப்போது, “தாலிபன்கள் ஓர் ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் பேசி போர் நிறுத்தமே தேவை என்று கோரினோம். அவர்கள் அப்போது அதை ஏற்கவில்லை. இப்போது அதற்குத் தயாராக உள்ளனர். இந்தமுறை அது சரியாக நடக்கும் என நம்புகிறோம்.” என ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த தாலிபன்கள் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு என்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று கூறினர்.

தாலிபன் பயங்கரவாதிகள் ஆப்கன் அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து மறுக்கின்றனர். இதனால் தாலிபன்களுடன் ஆப்கன் அரசு பேசுவதற்கான வாய்ப்பை தங்கள் நாட்டில் ஏற்படுத்திக்கொடுக்க சீன வெளியுறவுத்துறை முயல்கிறது.

சூடான் ஆலையில் விபத்து: தமிழர்கள் உட்பட 18 பேர் பலி

அடுத்த செய்தி