ஆப்நகரம்

சீனாவுடன் பேசி பிரயோஜனம் இல்லை: இந்தியாவுக்கு அமெரிக்கா அட்வைஸ்!

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் பிரயோஜனம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 5:44 pm

இந்தியா சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஜூன் 15ஆம் தேதியன்று இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
Samayam Tamil Modi - Xi


இதனால் இருதரப்பு உறவில் கசப்புத்தன்மை அதிகரித்துள்ளது. எனினும், பிரச்சினையை அமைதிவழியில் தீர்க்க இருதரப்பு அதிகாரிகள் முதல் ராணுவ, வெளியுறவு அமைச்சர்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், எல்லைப் பிரச்சினையை தீர்க்க சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பிரயஜோனமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் 60,000 சீன ராணுவ வீரர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரயன் பேசியபோது, “சீனாவின் முரட்டுத்தனத்தை இந்திய எல்லையில் பார்த்துவிட்டோம். சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாலும், உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசு சீனாவை எதிர்கொண்டு அமெரிக்க மக்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்க வளர்ச்சியையும், அமைதியையும் மேம்படுத்தி உலகில் அமெரிக்காவின் செலவாக்கை மேம்படுத்த வேண்டும். இதைத்தான் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

சீனாவை எதிர்கொள்வதற்கான திட்டங்களில் அதிபர் ட்ரம்ப் தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நமது ஜனநாயக கூட்டணி நாடுகளும் நம்மை பின்பற்றுகின்றனர். இண்டோ பசிபிக் பிராந்தியத்தில் ட்ரம்ப் அரசு ராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி