இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த 59 ஆப்களும் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு தடை செய்தது. இதைத்தொடர்ந்து, எல்லைப் பிரச்சினையை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று சீனா தெரிவித்தது. மேலும், சீன நிறுவனங்களுக்கு சட்டரீதியாக உதவியளிக்கப்படும் என சீன அரசு தெரிவித்தது.
இதையடுத்து, அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடைசெய்ய வேண்டுமென பல தரப்புகளில் குரல்கள் வலுப்பெற்றன. டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டுமென அமெரிக்க அரசிடம் பல்வேறு செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக வலைதள ஆப்களை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக சீன ஆப்களை தடை செய்ய திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.
எனினும், இதுவரை டிக்டாக் பயனர்களின் விவரங்களை சீனா கேட்கவில்லை எனவும், அப்படி கேட்டாலும் கொடுக்கமாட்டோம் என டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த 59 ஆப்களும் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு தடை செய்தது. இதைத்தொடர்ந்து, எல்லைப் பிரச்சினையை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று சீனா தெரிவித்தது. மேலும், சீன நிறுவனங்களுக்கு சட்டரீதியாக உதவியளிக்கப்படும் என சீன அரசு தெரிவித்தது.
இதையடுத்து, அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடைசெய்ய வேண்டுமென பல தரப்புகளில் குரல்கள் வலுப்பெற்றன. டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டுமென அமெரிக்க அரசிடம் பல்வேறு செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக வலைதள ஆப்களை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக சீன ஆப்களை தடை செய்ய திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.
எனினும், இதுவரை டிக்டாக் பயனர்களின் விவரங்களை சீனா கேட்கவில்லை எனவும், அப்படி கேட்டாலும் கொடுக்கமாட்டோம் என டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.