ஆப்நகரம்

தான் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சிறுமி!

குழந்தையை பெற்றெடுத்த சிறுமி, பயத்தில் தனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்துள்ளார்.

TNN 2 Oct 2016, 7:34 pm
குழந்தையை பெற்றெடுத்த சிறுமி, பயத்தில் தனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்துள்ளார்.
Samayam Tamil us teen delivers premature baby girl throws her out of window minutes later
தான் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சிறுமி!


அமெரிக்காவின், நெப்ராஷ்காவில் உள்ள ஒமஹாவில் 16 வயதான பெண் ஒருவள் கர்பமான விஷயத்தை அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இரவில் அந்த பெண் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தனியாக இருந்த பொழுது, குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து வலியால் துடித்த அந்த பெண்ணின் அலறலை கேட்டு அங்கு அந்த பெண்ணின் தாய் ஓடி வந்து கதவு தட்டியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் என்ன செய்வது என திகைத்த நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை அறையின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எரிந்துள்ளார்.

இதையடுத்து உள்ளே வந்த அவரின் தாய், தனது பெண்ணின் நிலையை உணர்ந்துள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட பொழுது தான் குழந்தை தூக்கி எறியப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையையும், சிறுமியையும் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டது. இருப்பினும் குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி மேல் இதுவரை எந்த புகாரும் பாதியப்படவில்லை.

அடுத்த செய்தி