கொரோனா இரண்டாம் அலையுடன் இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. உலக நாடுகள் தங்களால் இயன்ற உதவியும், ஆதரவும் இந்தியவுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு மிக முக்கியம் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரிப்பது நெஞ்சை பதறவைப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, “என் குடும்பத்தில் பல தலைமுறையினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
என் தாயார் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இன்றும் என் குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமானது. அமெரிக்காவில் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியபோது இந்தியா உதவியது.
தேவைப்படும் நேரத்தில் இந்தியாவுக்கு உதவுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து பணிபுரியும் என நம்புகிறேன். இந்திய பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் தொடர்புகொண்டு பேசி உதவுவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
என் தாயார் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இன்றும் என் குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமானது. அமெரிக்காவில் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியபோது இந்தியா உதவியது.
தேவைப்படும் நேரத்தில் இந்தியாவுக்கு உதவுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து பணிபுரியும் என நம்புகிறேன். இந்திய பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் தொடர்புகொண்டு பேசி உதவுவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.