ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போட்டதும் மரணம்.. தடுப்பூசியால் மரணம் வருமா? உண்மை என்ன?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2021, 7:39 pm
ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸால் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்ட உலக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளால் தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் ஒருவர் உடனடியாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil us virginia woman dies shortly after getting pfizer covid vaccine shot
கொரோனா தடுப்பூசி போட்டதும் மரணம்.. தடுப்பூசியால் மரணம் வருமா? உண்மை என்ன?


​கொரோனா தடுப்பூசி

கடந்த ஆண்டின் இறுதி முதல் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்து அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

​தடுப்பூசி போட்டவுடன் மரணம்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ட்ரீன் கீய்ஸ் என்ற 58 வயது பெண்மணிக்கு ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர் தடுப்பூசி போட்ட பிறகு இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

​என்ன காரணம்?

ட்ரீன் கீய்ஸின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், அவர் தடுப்பூசியால்தான் இறந்தார் என்பதற்கு இதுவரை எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். கூடுதல் தகவல்களை திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

​தடுப்பூசி போட்டால் மரணமா?

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என மருத்துவ நிபுணர்கள் ஒப்புதல் அளித்தபிறகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஏற்கெனவே நார்வே நாட்டில் சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் சிலர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு, அவர்கள் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனவே, கொரோனா தடுப்பூசி போட்டால் மரணம் நிகழும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

அடுத்த செய்தி