ஆப்நகரம்

ஒரு அடி நீள விஷத் தேள்; அதுவும் தலைக்கு மேல - விமானத்தில் நிகழ்ந்த பயங்கரம்!

விமானப் பயணத்தின் போது, ஒரு அடி நீள விஷத் தேளைக் கண்டதால், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

Samayam Tamil 17 Feb 2019, 4:51 pm
விமானத்தில் பயணிக்கும் போது, மிகுந்த அச்சம் கொள்வீர்களா. அப்படியென்றால் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டால், விமானத்தில் ஏறவே மாட்டீர்கள். இந்தோனேசியாவில் விமானத்தில் ஏறிய பயணிகள், லாக்கர் அருகே 12 இஞ்ச் நீள விஷத் தேளைக் கண்டுள்ளனர்.
Samayam Tamil Scorpion


முதலில் வயதான தம்பதியினர் அதைப் பார்த்தனர். இதனால் மிகுந்த அச்சமுற்று, அவர்கள் இடத்தை விட்டு வேகமாக ஓடினர். இதுகுறித்து கேள்விப்பட்ட பிற பயணிகளும் பயத்தில் விலகி ஓடினர்.

சிலர் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன. அதில், தலைக்கு மேற்புறம் இருக்கும் லாக்கரில் இருந்து விஷத் தேள் வெளியே வருகிறது.

பின்னர் ஊர்ந்து வேறு இடத்திற்கு செல்கிறது. இதுகுறித்து டஸ்லின் என்ற பயணி கூறுகையில், லயன் ஏர் விமானத்தில் பேகன்பருவில் இருந்து ஜகர்த்தா நோக்கி பயணித்தோம். விஷத் தேளைக் கண்டவுடன் உடனடியாக அவசர கால பட்டனை அழுத்தினோம்.

ஆனால் விமான ஊழியர்கள் உடனடியாக எந்தவித உதவியும் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட பயணிகளின் அழுகுரலைக் கேட்ட பின்பும், அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, விஷத் தேள் எங்கோ சென்று மறைந்து கொண்டது.

எல்லா தேள்களிடமும் விஷக் கொடுக்கு இருக்கும். இருப்பினும் பெரும்பாலான தேள்கள் மனிதர்களுக்கு விபரீதமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படுத்தாது. தேள்களில் 25 வகையைச் சேர்ந்தவை மனிதர்களின் உயிரைக் கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை கொண்டன.

இணையத்தில் வைரலான வீடியோ மூலம் ஆய்வு மேற்கொண்ட விலங்கியல் நிபுணர்கள், சம்பந்தப்பட்ட தேள் ஆசிய வனப்பகுதியில் வசிக்கும் கொடிய விஷத் தன்மை கொண்டது. இது இந்தோனேசிய காடுகளிலும் காணப்படக் கூடியது என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அந்த விஷத் தேள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி