ஆப்நகரம்

சிறுமியின் செயலும், பாதிரியாரின் ரியாக்ஷனும்..! இணையத்தை கலக்கும் வீடியோ..!

வெளிநாட்டில் உள்ள பேராலயத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்த பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 23 Oct 2020, 3:21 pm
குழந்தைகள் உள்ள வீட்டில் அன்புக்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. கோபமோ, அழுகையோ எந்த விதமான சூழலிலும் குழந்தையின் முகத்தை பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். குத்த வரும் கொலைகாரன் கூட குழந்தையின் சிரிப்பை பார்த்தால் மனம் இரங்கி விடுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.
Samayam Tamil video picture


பல நேரங்களில் பெரிய சண்டை கூட சுட்டி குழந்தையால் தீர்ந்து விடும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் தனி சிறப்புதான். மழலை பருவம் என்பதால் குழந்தைகளுக்கு எந்த வித விதிமுறையோ, பின்பற்றுதலோ கிடையாது. அதே சமயம் குழந்தைகள் குழந்தை தனமாக நடப்பதையே அனைவரும் விரும்புவர்.

அந்த வகையில், இந்த சம்பவமும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்படி உள்ளது. வெளிநாட்டில் நடந்துள்ள இந்த நிகழ்வை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், தேவாலயத்தில் உள்ள பாதிரியாரிடம் ஜெபித்து ஆசீர்வாதம் வாங்குவதற்கு பெண்மணி ஒருவர் தனது சிறிய மகளுடன் செல்கிறார். அந்த பாதிரியார் கையை உயர்ந்து ஜெபிக்க தொடங்குகிறார்.


பயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு!

அதை மாற்றி புரிந்துகொண்ட அந்த சிறுமி, பாதிரியாரை கையில் ஹைஃபை அடிக்கிறது. இதையடுத்து தீவிர ஜெபத்தில் இருந்த அந்த பாதிரியார் சிரிப்பை அடக்கமுடியாமல் ஜெபித்தவாறே சிரிக்க, அருகிலிருந்தவர்களும் சிரித்தனர். கொரோனா காலத்தில் பொறுப்பாக தாயும், மகளும் மாஸ்க் அணிந்துகொன்டு இருக்கும் நிகழ்வும், ஜெபம் செய்வதற்காக கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த சம்பவமும் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.

அடுத்த செய்தி