ஆப்நகரம்

அமெரிக்க அதிபர் முடி சூடப் போவது யார்? சில மணி நேரங்களில்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 3 Nov 2020, 2:32 pm
ஒவ்வொரு நாட்டிலும் அதன் உச்ச பட்ச பதவிக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கும் போது அந்த நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் அந்தத் தேர்தல் கவனம் பெறும். அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிபர் தேர்தல்கள் உடனடியாக சர்வதேச கவனம் பெற்றுவிடும்.
Samayam Tamil voting for the us presidential election is in full swing
அமெரிக்க அதிபர் முடி சூடப் போவது யார்? சில மணி நேரங்களில்!


ட்ரம்புக்கு வாய்ப்பு இருக்கிறதா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடென், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் சாதிப்பாரா?

ஜோ பிடென் தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கு கடுமையான சவாலாக இருக்கிறார். மேலும் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இருவரும் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடென் டொனால்ட் டிரம்ப்பை விட முன்னணியில் உள்ளார். சமீபத்திய மாதங்களில் அவரது ஆதரவு சுமார் 50% வரை உயர்ந்துள்ளது. என்பிசி நியூஸ், சி.என்.என்., கருத்துக் கணிப்புகளிலும் ஜோ பிடென் முன்னணி வகிக்கிறார். அரிசோனா, ப்ளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மின்னசோட்டா, வடக்கு கரோலினா, நியூ ஹேம்ப்ஷயர், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் இரு கட்சிகளுக்கு ஆதரவு இருக்கிறது. எனவே இந்த மாகாணங்கள் வெற்றியை தீர்மாணிக்கும் இடத்தில் இருக்கும்.

கடைசி நேர பரபரப்பு!

இன்று (நவம்பர் 3) அமெரிக்க உள்ளூர நேரப்படி அனைத்து மாகாணங்களிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்கெடுப்பு நடக்கிறது. அமெரிக்க மாகாணங்களுக்கு இடையில் நேர வேறுபாடு இருப்பதால், வாக்குப் பதிவு சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.

வியன்னாவில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை மக்கள் நேரடியாக வாக்களித்தாலும் ‘எலெக்ட்ரல்’ என்ற முறை அடிப்படையிலேயே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களிடம் அதிக வாக்குகளை பெற்றபோதும் எலெக்ட்ரல்களை பெற தவறினால் அவர் தோல்வியடைவார். கடந்த முறை ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகளைப் பெற்ற போதும் இந்த முறையிலேயே வெற்றியை இழந்தார். புஷ் மக்களிடம் வாக்குகளை குறைவாக பெற்ற போதும் அதிபர் பதவியைப் பெற்றார்.

அடுத்த செய்தி