இந்தியா மீது போர் தொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று, பாகிஸ்தான் விளக்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, திடீர் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சமீபத்தில் இந்திய ராணுவத்தினர் ரகசியமாக ஊடுருவி, தாக்குதல் நடத்தினர். இதில், 40க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறையாக அறிவித்தபிறகே, வெளியுலகத்தினருக்கு தெரியவந்தது. அதேசமயம், முதலில், இதுபற்றி மறுப்பு தெரிவித்துவந்த பாகிஸ்தான், தற்போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரவில்லை என்று, பாகிஸ்தான் கூறிவருகிறது.
இத்தகைய சூழலில் இந்தியா மீது பாகிஸ்தான் எந்நேரமும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு குறித்து, பாகிஸ்தான் நாட்டின் தூதர் ஜலில் அப்பாஸ் ஜிலானி, அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், போரிடும் திட்டம் ஏதும் இல்லை என்றும், இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தானின் தனிப்பட்ட நலன்களை காஷ்மீர் மக்கள் மீது திணிக்கக்கூடாது எனவும் ஜலில் அப்பாஸ் ஜிலானி சுட்டிக்காட்டி உள்ளார்.
War not an option, says Pakistan's envoy to US:
A Pakistani envoy visiting the Unites States of America to discuss their views on the Kashmir issue said on Ocotber 10 that war was not an option for the two neigbouring countries.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, திடீர் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சமீபத்தில் இந்திய ராணுவத்தினர் ரகசியமாக ஊடுருவி, தாக்குதல் நடத்தினர். இதில், 40க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறையாக அறிவித்தபிறகே, வெளியுலகத்தினருக்கு தெரியவந்தது. அதேசமயம், முதலில், இதுபற்றி மறுப்பு தெரிவித்துவந்த பாகிஸ்தான், தற்போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரவில்லை என்று, பாகிஸ்தான் கூறிவருகிறது.
இத்தகைய சூழலில் இந்தியா மீது பாகிஸ்தான் எந்நேரமும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு குறித்து, பாகிஸ்தான் நாட்டின் தூதர் ஜலில் அப்பாஸ் ஜிலானி, அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், போரிடும் திட்டம் ஏதும் இல்லை என்றும், இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தானின் தனிப்பட்ட நலன்களை காஷ்மீர் மக்கள் மீது திணிக்கக்கூடாது எனவும் ஜலில் அப்பாஸ் ஜிலானி சுட்டிக்காட்டி உள்ளார்.
War not an option, says Pakistan's envoy to US:
A Pakistani envoy visiting the Unites States of America to discuss their views on the Kashmir issue said on Ocotber 10 that war was not an option for the two neigbouring countries.