ஆப்நகரம்

சிறுவனை வாஷிங் மெஷினுக்குள் அடைத்த மலேசிய இளைஞர்; விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

கோலாலம்பூர்: விளையாட்டின் போது வாஷிங் மெஷினுக்குள் சிறுவனை வைத்து விளையாடிய போது, விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 8:56 pm
மலேசியாவின் சிலாங்கூர் அடுத்த தமன் செண்டோசாவில் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்தக் கடைக்கு தாய் மற்றும் 4 வயது மகன், மாமா ஆகியோர் சென்றுள்ளனர்.
Samayam Tamil Machine


இந்நிலையில் விளையாட்டிற்காக சிறுவனை, கடையில் இருந்த வாஷிங் மெஷினிற்குள் மாமா அடைத்துள்ளார். இதையடுத்து சிறுவனின் தாய் தேடி அலைவார் என்று எண்ணியுள்ளார்.

அப்போது சிறுவனை மெஷினில் சிக்கிக் கொண்டான். வெளியில் வர முடியாமல் தவித்துள்ளான். இதனால் பயந்த மாமா மற்றும் தாயார், கடை ஊழியர்களை அழைத்தனர்.

அவர்கள் திறமையுடன் செயல்பட்டு, சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாமா கைது செய்யப்பட்டார்.

Washing machine prank, Cops arrest boy's uncle in Malaysia.

அடுத்த செய்தி