ஆப்நகரம்

பதவியேற்க முடியாமல் திணறும் தலிபான்கள்! - சாதி பிரச்னை காரணமா..?

ஆப்கனில், தற்காலிக அரசை அமைத்துள்ள தலிபான் அமைப்பினர், இதுவரை பதவியேற்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Samayam Tamil 18 Sep 2021, 7:37 pm
ஆப்கானிஸ்தான் நாட்டில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், தற்காலிக அரசு அமைத்தும், இதுவரை பதவி ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
Samayam Tamil what is the reason behind taliban for not taking oath in afghanistan
பதவியேற்க முடியாமல் திணறும் தலிபான்கள்! - சாதி பிரச்னை காரணமா..?



ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர்.

இதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றார். தற்போது அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, முல்லா அகுந்த் தலைமையில் தலிபான்கள் தற்காலிக அரசும் அமைத்துள்ளனர்.

​தற்காலிக அரசு: தலிபான்கள்

தலிபான் அமைப்பினர் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், ஆப்கானிஸ்தானில் தற்காலிக அரசை தலிபான்கள் அமைத்துள்ளனர். அவர், ஆப்கனின் செயல் பிரதமராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், துணை செயல் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது போல் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை தலிபான்கள் நியமித்துள்ளனர். எனினும் அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை

​பதவி ஏற்பு தள்ளிவைப்பு?

அமெரிக்காவில், இரட்டை கோபுர தாக்குதல் நடந்ததன், 20 ஆம் ஆண்டு நினைவு தினமான, செப்டம்பர் 11 ஆம் தேதி, தலிபான்கள் அரசு பதவி ஏற்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்த தலிபான்கள், விரைவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை பதவி ஏற்கவில்லை.

​தலிபான்களுக்குள் சாதி பிரச்னை?

தலிபான்களுக்குள் சாதி பிரச்னை நிலவி வருவதால், புதிய அரசு பதவி ஏற்பு நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில், பஷ்தோ, பார்சி மற்றும் துருக்கி ஆகிய மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. மேலும், பஷ்தூன், தஜிக், உஸ்பெக் மற்றும் ஹஸாரா ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன.

"ப்ளீஸ் எங்கள மன்னிச்சிடுங்க!" - ஆப்கனிடம் கெஞ்சிய அமெரிக்கா!

இதற்குள் பல சாதிப் பிரிவுகள் உள்ள நிலையில், தங்கள் சாதி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வகையில், தலிபான் அமைப்பினரிடையே கடும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் தற்காலிக அரசு அமைத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் தலிபான்கள் திணறுகின்றனர்.

தலிபான்கள் சொல்வது என்ன?

தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

தங்கள் அமைப்புக்குள் எந்தவித மோதலும் இல்லை. சாதி பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆப்கனில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு விரைவில் பதவி ஏற்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

அடுத்த செய்தி