கொரோனாவிற்கு எண்ட் கார்டு போடும் அரசு; நம்பிக்கையூட்டும் செய்தி!
புதிய கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்று தடுப்பூசி செயற்பாட்டுக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 8 May 2021, 12:36 pm
ஹைலைட்ஸ்:
- இங்கிலாந்தில் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல்
- வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிலைமை கட்டுக்குள் வரும் என நம்பிக்கை
- கொரோனா தடுப்பூசி செயற்பாட்டுக் குழு தலைவர் க்ளைவ் டிக்ஸ் உறுதி
இங்கிலாந்து நாட்டில் தற்போது புதிய உருமாற்றம் பெற்ற கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்திருக்கிறது. இதையொட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை முழுவதும் சீரடைவதற்குள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மூன்றாவது அலைக்கு வித்திடக் கூடும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி செயற்பாட்டுக் குழு தலைவர் க்ளைவ் டிக்ஸ் கூறுகையில், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய வைரஸின் ஆதிக்கம் குறைந்துவிடும். ஆகஸ்ட் மாதத்தில் நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிடும். இதன்மூலம் தடுப்பூசி பூஸ்டர் திட்டம் வரும் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்.
அதேசமயம் பல்வேறு துணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர். வரும் ஜூலை மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது இங்கிலாந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து விதமான வைரஸ்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் தடுப்பூசி செயற்பாட்டுக் குழுவிற்கு இடைக்கால தலைவராக க்ளைவ் டிக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 51 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இதன்மூலம் தங்கள் நாட்டின் பாதி இளைஞர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தக்கூடிய உலகின் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. ஆக்ஸ்போர்ட்/அஸ்ட்ராஜெனகா கோவிட்-19 தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதால் 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மாற்று தடுப்பூசிகளை நாட அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேசமயம் பல்வேறு துணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர். வரும் ஜூலை மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது இங்கிலாந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து விதமான வைரஸ்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் தடுப்பூசி செயற்பாட்டுக் குழுவிற்கு இடைக்கால தலைவராக க்ளைவ் டிக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 51 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இதன்மூலம் தங்கள் நாட்டின் பாதி இளைஞர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தக்கூடிய உலகின் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. ஆக்ஸ்போர்ட்/அஸ்ட்ராஜெனகா கோவிட்-19 தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதால் 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மாற்று தடுப்பூசிகளை நாட அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.