ஆப்நகரம்

கொரோனாவோட எல்லாம் முடிஞ்சிடாது: WHO எச்சரிக்கை!

கொரோனாவுடன் எல்லா கொள்ளை நோய்களும் முடிந்துவிடாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Dec 2020, 9:04 pm
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் வெளியாகி பல்வேறு நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ள நிலையில், கொரோனாவுடன் எல்லாம் முடிந்துவிடாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Tedros


உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “கோவிட்-19 கடைசி கொள்ளை நோய் இல்லை என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. கொள்ளை நோய்கள் நமது வாழ்வின் ஒரு பகுதி.

குப்பையில் கிடந்த பூனைக்கு அரசு பதவி!
நோய் பற்றி பதற்றமடைந்துவிட்டு பின்னர் கண்டுகொள்ளாமல் விடுவது என உலகமே நீண்டகாலமாக ஒரே சுழற்சியில் இயங்கி வருகிறது. ஒரு கொள்ளை நோய் பரவத் தொடங்கியபின் நாம் பணத்தை அள்ளி வீசுகிறோம். நோய் மறைந்தபிறகு நாமும் மறந்துவிடுகிறோம். அடுத்த நோயை தடுப்பது பற்றி எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

தற்போது இருக்கும் அமைப்பு மிகவும் குறுகிய பார்வையுடயதாக இருக்கிறது. சொல்லப்போனால் இந்த அமைப்பை புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. மனிதர்கள், விலங்குகள், பூமி ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் பூமியில் வாழ்வதே கடினமாகிவிட்டது.

தடா போட்ட டாக்டர்கள்: கட்சி குறித்து ரஜினி புது முடிவு
வலுவான ஆரம்ப சுகாதாரமே உலகளாவிய சுகாதாரத்துக்கான அடித்தளம். கொள்ளை நோய்களை எதிர்கொள்ள தயாராக வேண்டுமெனில் அனைத்து அரசுகளும், அனைத்து சமூகங்களும் இணைந்து அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி, கொள்ளை நோய்களை எதிர்கொள்ள உலகம் தயார்நிலையில் இல்லை என தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி