கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அந்த அமைப்பின் நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம் என முடிவு செய்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அரித்மியா ஆகிய இரண்டு மருந்துகளும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இந்த மருந்துகள் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறியிருக்கின்றன.
கொரோனா தடுப்பு ஊசி: ஆஸ்திரேலியாவில் பிறந்த புது நம்பிக்கை!!
குறிப்பாக, லான்செட் நிறுவனத்தின் ஆய்வு முடிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு எந்த மருந்தும் பலன் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. 96 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் செய்யப்பட்ட விரிவான சோதனையில் இது தெரியவந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் இறப்பு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் கூறியிருக்கிறார். பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதனை உறுதி செய்துள்ளன.
இதனிடையே, அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வராமல் இருக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும் அதன் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப அவசர ஏற்பாடு