ஆப்நகரம்

கொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்!

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்த மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

Samayam Tamil 4 Jun 2020, 8:39 am
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ந்துவருகிறது.
Samayam Tamil covid 19 vaccine


கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதுதான் உலக மருத்துவ ஆராய்சியாளர்களுக்கு இப்போதுள்ள மிகப் பெரிய சவால். தடுப்பு மருந்தை கண்டறிய ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் வேகம் காட்டிவந்தாலும் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவைக் குணப்படுத்த மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏற்றுமதி செய்யப்பட்டது. பிற நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பியது.

சென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்!

இந்நிலையில் கடந்த மே 25ஆம் தேதி கொரோனாவுக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டது.

இந்த மாத்திரைகள் பயன்படுத்துவதால் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது என தி லான்கெட் மருத்துவ ஆய்விதழ் குறிப்பிட்டபின் உலக சுகாதார நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.

திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா... சென்னை மக்களே உஷார்!!

அதன்பின் கொரோனா இறப்பு குறித்த தரவுகளை மீண்டும் ஆய்வு செய்ததில் இந்த சோதனை முறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என வல்லுநர்கள் தெரிவித்தனர். இதன்பின்னர் மீண்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி