ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பா? WHO சொன்ன நிம்மதியான செய்தி!

கொரோனா தடுப்பூசிக்கும், உயிர்பலிகளுக்கும் தொடர்பில்லை எனவும், ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 6:22 pm
கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Pfizer vaccine


அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட உலகளவில் முதல்முதலில் இங்கிலாந்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரஷ்ய அதிபரின் ரகசிய மாளிகை.. பிரம்மிக்கவைக்கும் விலை.. வெளியான சீக்ரட் வீடியோ!
நார்வே நாட்டில் ஃபைசர் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடப்பட்ட 33 முதியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இறந்தவர்களின் உடலை ஆய்வு செய்தபிறகு, தடுப்பூசிக்கும் மரணத்துக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது.

இருப்பினும், கொரோனா தடுப்பூசி மீது சிலருக்கு இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. இந்நிலையில், ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகப் போரை மிஞ்சிய கொரோனா உயிர்பலி.. பைடனின் 100 நாள் சேலஞ்ச்!
இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உயிரிழந்ததற்கு தடுப்பூசிதான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், முதியோருக்கு போடுவதற்கு ஃபைசர் தடுப்பூசி மிகச் சரியானது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல, கொரொனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நார்வே அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி