ஆப்நகரம்

கொரோனா இரண்டாம் அலைக்கு இதுதான் காரணம்... உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!

பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2020, 2:49 pm
கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பல்வேறு நாடுகளில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வழிபாட்டுக் கூட்டங்களும், பொழுதுபோக்குக் கூட்டங்களும், இரவு கிளப்புகள், தங்குமிடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பொதுக் கூட்டம்


கொரோனா தொற்றை திறம்பட கட்டுப்படுத்திய தென்கொரியாவில், தலைநகர் சியோலில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விடுமுறைக்காலத்தில் சிறிய அளவில் இரண்டாம் அலை தொடங்கியிருந்தாலும், அது குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

இதுகுறித்து உலக சுகாதார மையத்தை சேர்ந்த தொற்று நோயியல் வல்லுநர் மரியான் வான் கெர்கோவ் பேசுகையில், “கொரோனா பரவலை வெற்றிகரமாக ஒடுக்கி, மனிதர்களிடையேயான தொற்று பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தென்கொரியாவும் ஒன்று. கொரோனா தொற்று மீண்டும் நிலைபெறுவதற்கு இது ஒரு வாய்ப்பு. நிச்சயமாக கொரோனா பரவல் நிலைபெறும்.

கொரோனா சமூகப் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார மையத்தின் மற்றொரு வல்லுநரான மைக் ரயன், “தென்கொரியாவில் கிளப்புகள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் கூட்டம் கூடியதால் புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிகை சரிந்துகொண்டே வருகிறது. வைரஸ் தொற்று எந்தப் பகுதிகளில் அதிகம், எந்த பகுதிகளில் பரவலுக்கான ஆபத்துகள் அதிகம் என தென்கொரிய அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி